அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறை அடைக்கப்பட்டுள்ளார். அதனை அடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் வழங்க கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக 17 முறை இவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.