முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் சட்ட விரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவல் 43 வது முறையாக நீட்டிக்கப்பட்டு வரும் ஜூலை 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது