அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பத்தாவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தற்போது நீதிமன்ற காவல் முடிவடையுள்ள நிலையில் பத்தாவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தமான ஆவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.