அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவிக்காலத்தில் சட்டவிரோதமாக பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பல முறை ஜாமின் மனுக்கள் தள்ளுபடி ஆன நிலையில், உச்ச நீதிமன்றம் தற்போது நிபந்தனையுடன் ஜாமினை வழங்கியுள்ளது. இந்த நிலையில், அவர் ஒவ்வொரு வாரமும் அமலாக்கத்துறையில் ஆஜராக வேண்டும். மேலும் வழக்கு தற்போது சென்னை முதன்மை அமர்வில் விசாரணைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் அவர் மீண்டும் அக்டோபர் 4-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.