செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

August 8, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது குறித்து அளித்த மேல்முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்ந்து நீதிமன்றத்தில் […]

அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கைது செய்தது குறித்து அளித்த மேல்முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்ந்து நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் செந்தில் பாலாஜியை வரும் செப்டம்பர் 12ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனை தொடர்ந்து 12 ம் தேதி வரை தினமும் 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. மேலும் அவர் அளிக்கும் பதிலை வைத்து அடுத்த கட்டத்திற்கான விசாரணை நகரும் எனவும் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணை ஆனது ஆவணங்கள் அடிப்படையில் கேள்வி கேட்கப்பட உள்ளது. மேலும் இந்த கேள்விகளை எழுத்துப்பூர்வமாக கேட்டு பதிலை வீடியோவில் பதிவு செய்ய உள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நீதிமன்ற காவல் நீட்டிக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் அனுமதி மறுக்கப்பட்டால் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu