இலங்கை கிழக்கு மாகாண கவர்னராக செந்தில் தொண்டமான் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் போராட்டம் வெடித்தது. இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர். ஆளும் பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கே அதிபர் ஆனார். பிரதமராக தினேஷ் குணவர்தனே உள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் கிழக்கு மாகாண கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் பொறுப்பேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவருடன் இலங்கை வட மாகாண கவர்னராக பி.எம்.எஸ். சார்ல்ஸ், வட மேற்கு மாகாண கவர்னராக லட்சுமன் யாப்பா ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.