இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. இனி இணையம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்கள் தனியாக கால் பேசும் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பும் திட்டங்களை வாங்கிக்கொள்ளலாம். இந்த புதிய விதியால், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள இணையம் பயன்படுத்தாத மக்கள் பயனடைவார்கள்.
இதற்கு முன், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணையம் தேவையில்லாத போதும், இணைய சேவைகளுடன் கூடிய திட்டங்களை மட்டுமே வழங்கி வந்தன. இதனால் பல வாடிக்கையாளர்கள் கூடுதல் பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கான நல்ல தீர்வாக இந்த திட்டம் அமைந்துள்ளது.