கேரளாவில் வெப்ப அலை தாக்கியதில் வாக்களிக்க வந்த ஏழு பேர் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று கடும் வெப்ப அலை பாதித்ததாகவும், இதனால் பல மாநிலங்களில் ஓட்டுப்பதிவு குறைந்ததாகவும் கூறப்பட்டது. அதேபோல் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை வீசியது. இதனை சமாளிக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு கேரளாவில் நடைபெற்றது. அதில் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்களிக்க வந்த ஏழு பேர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளனர்.