பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான்வாலி மாவட்டத்தின் மேகர்வால் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரின் துப்பாக்கிசூட்டில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
உளவுத்துறை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், பயங்கரவாதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலின் போது 8 பேர் தப்பியோடினர். அவர்களை தேடும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து 6 கையெறி குண்டுகள், 7 கலாஷ்னிகோவ்கள், துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.