பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஏழாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு, பெண் காவலர்களை அவதூறாக பேசியது உட்பட 6 வழக்கு பதிந்து இருந்த நிலையில் நேற்று ஏழாவதாக சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி சென்னை மதுரவாயிலில் உள்ள அவரது வீடு மற்றும் தி நகரில் உள்ள அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வீட்டில் 10 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது. அதில் 2 லட்சம் பணம், கஞ்சா, சிகரெட்டுகள் லேப்டாப் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது