நெதர்லாந்தில் இன்று பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டு மற்றொரு சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளிவந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நெதர்லாந்தில் ஹாக் மற்றும் ஆம்ஸ்டர்டாம் ஆகிய பகுதிகளுக்கு நடுவில் ஊர்ஷோட்டன் என்ற கிராமம் உள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3:25 மணிக்கு, இந்தப் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது. விபத்தை தொடர்ந்து அங்கு தீ பற்றி எரியத் தொடங்கியதால், ரயில் முழுவதுமாக சேதம் அடைந்தது. எனவே, மீட்புத் துறையினர் கிராமத்திற்கு விரைந்து சென்று அவசரகால நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் ரயில், பராமரிப்புக்காக நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் ஆப்பரேட்டர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.