பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனை அமைச்சரவையின் நியமனக் குழுவின் செயலாளர் மனிஷா சக்ஷேனா உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய, பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், பிரதமர் மோடியின் பதவிக்காலம் வரை அந்தப் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். 6 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்த அவர், கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல், நிதி ஆயோக்கின் சி.இ.ஓ.,வாக செயல்பட்டு வந்த பி.வி.ஆர்.சுப்ரமணியன் அவர்களின் பதவி காலமும் ஓராண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.