கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை, ரஷிய வெளியுறவு மந்திரி இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதற்காக ரஷிய வெளியுறவு துறை மந்திரி செர்கெய் லவ்ரவ் இன்று காலை கோவாவின் தபோலிம் விமான நிலையத்திற்கு வருகை தந்து உள்ளார். அவருடன் அந்நாட்டை சேர்ந்த உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரும் வந்து உள்ளனர். இதன்பின்னர், இன்று நடைபெறும் இருதரப்பு சந்திப்பில் மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கரை அவர்கள் இன்று சந்தித்து பேச உள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த வெளியுறவு மந்திரிகளும் பங்கேற்க இருக்கின்றனர்.