கேரளா புதிய தலைமைச் செயலாளராக சாரதா முரளீதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் தலைமைச் செயலாளராக தற்போது டாக்டர் வி. வேணு உள்ளார். அவர் 31-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதற்கிடையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மந்திரி சபை கூட்டத்தில், வேணுவின் மனைவி ஐஏஎஸ் அதிகாரி சாரதா முரளீதரனை புதிய தலைமைச் செயலாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சாரதா, தற்போது திட்டக்குழுவின் கூடுதல் தலைமைச் செயலராக உள்ளார். கேரளாவில் கணவனை தொடர்ந்து மனைவியை தலைமைச் செயலாளராக தேர்வு செய்வது முதன்முறையாகும். அவர் 1-ம் தேதி பதவியேற்க உள்ளார்.