கடந்த ஒரு வாரமாக இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டு வந்த நிலையில், இன்று பெரிய மாற்றங்கள் எதுவும் இன்றி பங்குச்சந்தை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடனும், தேசிய பங்குச் சந்தை இறக்கத்துடனும் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய வர்த்தகநாளின் முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 94.05 புள்ளிகள் உயர்ந்து 67221.13 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 3.15 புள்ளிகள் சரிவடைந்து 19993.2 புள்ளிகளிலும் உள்ளன.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டிசிஎஸ், எல் அண்ட் டி, இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டேவிட் லேப்ஸ், நெஸ்லே, பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், பவர் கிரிட், பிபிசிஎல், என்டிபிசி, அதானி என்டர்பிரைசஸ், கோல் இந்தியா, மாருதி சுசுகி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.