பங்குச் சந்தையில் நீடிக்கும் ஏற்றம் - சென்செக்ஸ் 692 புள்ளிகள் உயர்வு

June 6, 2024

தேர்தல் முடிவுகள் வெளியான 2வது நாளான இன்றும் பங்குச் சந்தையில் ஏற்றம் தொடர்கிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 692.27 புள்ளிகள் உயர்ந்து 75074.51 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 201.06 புள்ளிகள் உயர்ந்து 22821.4 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ லைஃப், ஸ்ரீராம் பைனான்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ், ஈச்சர் […]

தேர்தல் முடிவுகள் வெளியான 2வது நாளான இன்றும் பங்குச் சந்தையில் ஏற்றம் தொடர்கிறது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 692.27 புள்ளிகள் உயர்ந்து 75074.51 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 201.06 புள்ளிகள் உயர்ந்து 22821.4 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், ஹெச் சி எல் டெக், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ லைஃப், ஸ்ரீராம் பைனான்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஐடிசி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ், அதானி எண்டர்பிரைசஸ் போன்ற அநேக நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹிண்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹீரோ மோட்டோகார்ப், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, மஹிந்திரா, சிப்லா போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu