பங்குச்சந்தையில் தொடரும் ஏற்றம் - சென்செக்ஸ் 376 புள்ளிகள் உயர்வு

February 16, 2024

இந்திய பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்றைய நாளின் தொடக்கம் முதலே ஏற்றம் பெற்று வந்த பங்குச்சந்தை இறுதியில் 0.5% ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 376.26 புள்ளிகள் உயர்ந்து, 72426.64 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 129.96 புள்ளிகள் உயர்ந்து, 22040.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, மஹிந்திரா, […]

இந்திய பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இன்றைய நாளின் தொடக்கம் முதலே ஏற்றம் பெற்று வந்த பங்குச்சந்தை இறுதியில் 0.5% ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 376.26 புள்ளிகள் உயர்ந்து, 72426.64 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 129.96 புள்ளிகள் உயர்ந்து, 22040.7 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, மஹிந்திரா, எஸ் பி ஐ லைப், அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி, மாருதி சுசுகி, பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, பிபிசிஎல், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, பிரிட்டானியா, ரிலையன்ஸ், என்டிபிசி, அப்போலோ ஹாஸ்பிடல் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu