இந்திய பங்குச்சந்தை இன்று மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 906.07 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 338 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 72761.89 ஆகவும் நிஃப்டி 21997.7 ஆகவும் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஐடிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோட்டக் வங்கி, சிப்லா, பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, டாக்டர் ரெட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பவர் கிரிட், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.