தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தையில் சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 102.57 புள்ளிகள் சரிந்து 80502.08 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 21.66 புள்ளிகள் சரிந்து 24509.25 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், அதானி பவர், இந்தியன் ஹோட்டல்ஸ், வோடபோன், எஸ் வங்கி, சுஸ்லான் எனர்ஜி, எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், ரயில் விகாஸ் நிகாம் போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டிசிஎஸ், ஐடிசி, ரிலையன்ஸ், விப்ரோ, தேஜஸ் நெட்வொர்க்ஸ், ரேமண்ட், கோட்டக் வங்கி, இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.