சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை - சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு

March 27, 2024

நேற்று சரிவடைந்த இந்திய பங்குச்சந்தை இன்று 0.7% உயர்வை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 526.01 புள்ளிகள் உயர்ந்து 72996.31 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 118.96 புள்ளிகள் உயர்ந்து 22123.65 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், கோட்டக் வங்கி, என்டிபிசி, டாடா […]

நேற்று சரிவடைந்த இந்திய பங்குச்சந்தை இன்று 0.7% உயர்வை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 526.01 புள்ளிகள் உயர்ந்து 72996.31 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 118.96 புள்ளிகள் உயர்ந்து 22123.65 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், கோட்டக் வங்கி, என்டிபிசி, டாடா ஸ்டீல், ஹெச் டி எப் சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், யுபிஎல், ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ், கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஓ என் ஜி சி ஆகியவை சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu