இந்த வாரத்தின் முதல் நாளான இன்று, பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ளது. மேலும், மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 443.46 புள்ளிகள் உயர்ந்து 79476.19 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 131.36 புள்ளிகள் உயர்ந்து 24141.95 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, டாடா ஸ்டீல், மகாநகர் கேஸ், ஜொமாட்டோ, எஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி,மாருதி சுசுகி போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், இந்தியா சிமெண்ட்ஸ், மோதிலால் ஓஸ்வால், வோடபோன், அதானி பவர், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.