பங்குச் சந்தையில், கடந்த 3 தினங்களாக ஏற்றம் பதிவாகி வருகிறது. இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்றும், நல்ல முறையில் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 594.91 புள்ளிகள் உயர்ந்து, 64958.69 புள்ளிகளில் நிலைபெற்று உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 181.16 புள்ளிகள் உயர்ந்து, 19411.75 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், டேவிஸ் லேப்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ஆக்சிஸ் வங்கி, பிரிட்டானியா, பஜாஜ் பைனான்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பவர் கிரிட், கோல் இந்தியா, ரிலையன்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பாரத ஸ்டேட் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ், டைட்டன், சிப்லா, ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.