இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 259.58 புள்ளிகள் சரிந்து 71423.65 புள்ளிகளாக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 50.61 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 21571.8 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், கோட்டக் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பவர் கிரிட், ஹிண்டால்கோ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹிந்துஸ்தான் யூனிலீவர், டிசிஎஸ், மஹிந்திரா, ஹெச் சி எல் டெக், விப்ரோ வங்கி, டாடா ஸ்டீல், என் டி பி சி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.