கடந்த வாரம் முழுவதும் சரிந்து காணப்பட்ட இந்திய பங்குச் சந்தை இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 560.29 புள்ளிகள் உயர்ந்து 73648.62 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 189.41 புள்ளிகள் உயர்ந்து 22336.4 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பிபிசிஎல், டாடா கன்சியூமர், ஈச்சர் மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ஸ்ரீராம் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பவர் கிரிட், ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், கோட்டக் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, என்டிபிசி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன.