சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை - சென்செக்ஸ் 496 புள்ளிகள் உயர்வு

January 19, 2024

கடந்த 3 அமர்வுகளாக இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு பதிவான நிலையில், இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 496.37 புள்ளிகள் உயர்ந்து 71683.23 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 160.16 புள்ளிகள் உயர்ந்து 21622.4 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், ஓஎன்ஜிசி, ஏர்டெல், என்டிபிசி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், பிரிட்டானியா, […]

கடந்த 3 அமர்வுகளாக இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய சரிவு பதிவான நிலையில், இன்று சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 496.37 புள்ளிகள் உயர்ந்து 71683.23 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 160.16 புள்ளிகள் உயர்ந்து 21622.4 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், ஓஎன்ஜிசி, ஏர்டெல், என்டிபிசி, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், பிரிட்டானியா, ஐ சி ஐ சி ஐ வங்கி, பவர் கிரிட், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், எஸ்பிஐ லைஃப் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், இண்டஸ் இந்த் வங்கி, கோட்டக் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டேவிஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பாரத ஸ்டேட் வங்கி, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu