சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை - சென்செக்ஸ் 366 புள்ளிகள் உயர்வு

December 21, 2023

நேற்று மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 366.86 புள்ளிகள் உயர்ந்து, 70873.17 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 105.25 புள்ளிகள் உயர்ந்து, 21255.4 புள்ளிகளாக உள்ளது. இன்றைய வர்த்தகத்தில், பவர் கிரிட், பிபிசிஎல், பிரிட்டானியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் வங்கி, ஹிந்தால்கோ, என் டி பி சி, […]

நேற்று மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தை, இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 366.86 புள்ளிகள் உயர்ந்து, 70873.17 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 105.25 புள்ளிகள் உயர்ந்து, 21255.4 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், பவர் கிரிட், பிபிசிஎல், பிரிட்டானியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் வங்கி, ஹிந்தால்கோ, என் டி பி சி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, ஹெச் சி எல் டெக், சிப்லா, பஜாஜ் பின்சர்வ், மஹிந்திரா, ஓஎன்ஜிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu