இந்திய பங்குச் சந்தையில் இன்று ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 213.27 புள்ளிகள் உயர்ந்து, 65433.3 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 47.55 புள்ளிகள் உயர்ந்து, 19444 புள்ளிகளாக உள்ளது. தொடர்ந்து 3 வது அமர்வாக பங்குச் சந்தை புள்ளிகள் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தகத்தில், ஹிண்டால்கோ, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், கோட்டக் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவை ஏற்றமடைந்திருந்தன. குறிப்பாக, வங்கித் துறை இன்று ஏற்றமடைந்துள்ளது. அதே வேளையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், சன் ஃபார்மா, பார்தி ஏர்டெல் ஆகியவை இறக்கமடைந்தன. தொடர்ந்து உயர்ந்து வந்த அதானி குழும பங்குகள், இன்று சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.