இந்திய பங்குச் சந்தை இறக்கத்தில் தொடங்கி இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 453.85 புள்ளிகள் சரிந்து 72643.43 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 123.31 புள்ளிகள் சரிந்து 22023.35 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக, மஹிந்திரா, பிபிசிஎல், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ஹீரோ மோட்டோகார்ப், ஹெச் சி எல் டெக், ஐடிசி, ஹெச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல், ஐ சி ஐ சி ஐ வங்கி, பவர் கிரிட், என் டி பி சி, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக் வங்கி ஆகியவை வீழ்ச்சி அடைந்துள்ளன. அதே சமயத்தில், யூபிஎல், ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி லைஃப், அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ, அதானி போர்ட்ஸ் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன.