கடந்த வாரத்தில் தொடர் சரிவுகளை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று, ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 340 புள்ளிகள் வரை உயர்ந்தது. இறுதியாக, வர்த்தக நேர முடிவில் 267.43 புள்ளிகள் உயர்ந்து 65216.09 புள்ளிகளில் நிலை கொண்டது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 83.45 புள்ளிகள் உயர்ந்து 19393.6 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், பவர் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் வங்கி, டாடா ஸ்டீல், என் டி பி சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ரிலையன்ஸ், மஹிந்திரா, பிரிட்டானியா, எஸ் பி ஐ லைப், ஹெச் டி எப் சி வங்கி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.