இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 267.64 புள்ளிகள் உயர்ந்து, 71822.83 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 96.8 புள்ளிகள் உயர்ந்து 21840.05 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பிபிசிஎல், பாரத ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, கோல் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசுகி, டாடா ஸ்டீல், ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே வேளையில், டெக் மஹிந்திரா, சிப்லா, சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எஸ் பி ஐ லைஃப்,ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை சரிவடைந்துள்ளன.