இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில் இறக்கத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, இறுதியில் ஏற்றம் பெற்று நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 482.7 புள்ளிகள் உயர்ந்து 71555.19 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 127.21 புள்ளிகள் உயர்ந்து 21743.25 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, யுபிஎல், கோல் இந்தியா, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ லைஃப், எச்டிஎஃப்சி லைஃப், விப்ரோ, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன. அதே சமயத்தில், ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், கிராசிம், டேவிஸ் லேப்ஸ், பி பி சி எல், மஹிந்திரா, டைட்டன், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.