விடுமுறைக்குப் பிறகு இன்று தொடங்கிய இந்திய பங்குச் சந்தை, இறக்கத்துடன் தொடங்கி இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 316.31 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 65512.1 புள்ளிகளில் நிலை பெற்று உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 109.55 புள்ளிகளை இழந்து 19528.75 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, டைட்டன், பஜாஜ் பின்சர்வ், எஸ் பி ஐ, ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஓஎன்ஜிசி, ஈச்சர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, மாருதி சுசுகி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், என்டிபிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, கோட்டக் வங்கி, ரிலையன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.