பங்குச்சந்தையில் தொடர் ஏற்றம் - சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்வு

September 7, 2023

இந்திய பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் போது, கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது. இறுதியாக, வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 385.04 புள்ளிகள் உயர்ந்து, 66265.56 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 116 புள்ளிகள் உயர்ந்து, 19727.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, கோல் இந்தியா, எல் அண்ட் […]

இந்திய பங்குச் சந்தையில் தொடர் ஏற்றம் பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் போது, கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது. இறுதியாக, வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 385.04 புள்ளிகள் உயர்ந்து, 66265.56 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 116 புள்ளிகள் உயர்ந்து, 19727.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, கோல் இந்தியா, எல் அண்ட் டி, இன்டஸ் இன்ட் வங்கி, எஸ்பிஐ லைஃப், டாக்டர் ரெட்டீஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, மாருதி சுசுகி, என் டி பி சி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. ஆனால், அதே சமயத்தில், டாடா கன்சியூமர், பிரிட்டானியா, சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, நெஸ்ட்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், அப்பல்லோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ் போன்ற நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu