பட்ஜெட் அறிவிப்புக்கு மறுநாளான இன்று இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 440.33 புள்ளிகள் உயர்ந்து, 72085.63 புள்ளிகளில் நிலை பெற்று உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 156.35 புள்ளிகள் உயர்ந்து 21853.8 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பிபிசிஎல், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஈச்சர் மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி லைஃப், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.