இந்திய விமானப்படையின் வாயு சேனா பதக்கத்தை முதல் பெண் விங் கமாண்டர் பெற்றுள்ளார்.
இந்திய விமானப்படையின் பெண் கமாண்டர் ஒருவர் வீர தீர செயலுக்கான வாயு சேனா பதக்கத்தை பெற்றார். முதல் பெண் வீரரான விங் கமாண்டர் தீபிகா மிஸ்ராவிற்கு, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி இந்த பதக்கத்தை வழங்கினார். கடந்த ஆண்டு ராஜ் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 47 பேரின் உயிரை, விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா காப்பாற்றினார். இதற்காக அவருக்கு வாயு சேனா பதக்கம் வழங்கப்பபட்டது. பெண் விங் கமாண்டரின் துணிச்சல் மற்றும் தைரியம் இயற்கைப் பேரிடரில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சாதாரண மக்களிடையே பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தியது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.