நீண்ட காலமாக நீடித்து வந்த வழக்கில், பாரத்பே நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் இணை நிறுவனர் அஷ்னீர் க்ரோவர் இடையேயான தகராறு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இரு தரப்பினர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இனி இருவரும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின்படி, அஷ்னீர் க்ரோவர் பாரத்பே நிறுவனத்தில் இருந்து முற்றிலும் விலகிக் கொள்வதோடு, தனது பங்குகளையும் விட்டுத் தர வேண்டும். அவரது சில பங்குகள் பாரத்பே நிறுவனத்தின் நலனுக்காக Resilient Growth Trustக்கு மாற்றப்படும், மீதமுள்ள பங்குகள் அவரது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தரப்பினரும் தங்களுக்கு இடையே நிலவி வந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். பாரத்பே நிறுவனம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முழுமையாக கவனம் செலுத்த முடியும் என தெரிவித்துள்ளது.