ஈக்வடார் நாட்டின் மனாபி மாகாணத்தில் உள்ள வலென்சியாவில், சேவல் சண்டையில் திடீர் துப்பாக்கி சூடு.
ஈக்வடார் நாட்டின் மனாபி மாகாணத்தில் உள்ள வலென்சியாவில், சேவல் சண்டையை பார்ப்பதற்காக கூடிய மக்கள் கண்ணுக்கு பதுங்கிய மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளாகினர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் நடந்தது.
சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்குள் சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையை திருடிச் சென்றனர். தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ள நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்றது. விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.