காபூலில் உள்ள ஓட்டல் அருகே துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

December 13, 2022

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீனர்கள் அதிகம் தங்கியுள்ள ஓட்டலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டல் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஷாஹர்-இ-நாவ் பகுதியில் சீனர்கள் அதிகம் தங்கும் ஓட்டலை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்ற போது அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கு வந்த பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய 3 பேரை சுட்டுக்கொன்றனர். இந்த […]

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீனர்கள் அதிகம் தங்கியுள்ள ஓட்டலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஓட்டல் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஷாஹர்-இ-நாவ் பகுதியில் சீனர்கள் அதிகம் தங்கும் ஓட்டலை குறி வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்ற போது அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து, அங்கு வந்த பாதுகாப்பு படையினர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய 3 பேரை சுட்டுக்கொன்றனர்.

இந்த தாக்குதலின் போது ஓட்டல் பால்கனியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளனர். காபூலில் உள்ள சீன விருந்தினர் மாளிகைக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காபூலில் உள்ள சீன தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu