78 நாடுகளைச் சேர்ந்த 695 வீரர்கள் பங்கேற்கும் 3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் இன்று தொடங்கியது.
முனீச் நகரில் ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களும் பங்கேற்கின்றனர். இந்திய அணியில் 36 வீரர்கள் பங்கேற்கின்றனர். இரட்டை ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசாலே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில், அனன்யா நாயுடு, ஆதித்யா மால்ரா, நிஷாந்த் ரவாத் ஆகியோர் முதல் முறையாக உலக போட்டியில் பங்கேற்கிறார்கள். கடந்த சீசன்களில் இந்தியா 15 பதக்கங்கள் வென்றமை குறிப்பிடத்தக்கது. போட்டியில் இந்திய வீரர்கள் மேல் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.














