மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி விதிகளை மீறி 2 கிலோ மீட்டர் தொலைவில் வைத்து உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 ஆண்டுகளாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கட்டண விலக்கு அளிப்பதும், மீண்டும் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுப்பதும் ஆக உள்ளூர் வாகன உரிமையாளர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு சார்பில் வலியுறுத்தப்பட்டு இன்று திருமங்கலம், கப்பலூர், சிட்கோ பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் கப்பலூர் சுங்கசவடியை அகற்ற வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் மட்டுமில்லாமல் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.