ஆன்லைன் மூலம் கல்வி பயிற்றுவிக்கும் பைஜூஸ் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை சார்பில் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பைஜுஸ் நிறுவனம் 2011 முதல் 2023 ஆம் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் 9000 கோடி ரூபாயை அனுப்பியதாக புகார் எழுந்தது. அதற்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சார்பில் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரை மறுத்து வந்த பைஜூஸ் பயிற்சி நிறுவனம் இது குறித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் பயிற்சி நிறுவனத்தின் சி.இ.ஓ வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.