சித்தர்களும் சித்த மருத்துவமும்

விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்த கொள்ள யாரும் முற்படுவதில்லை. ஆனால், தன்னை அறியும் கலையே உலகை அறியும் கலை ஆகும் என்பதை உணர்த்தியவர்களே சித்தர்கள் ஆவர். முதலில் உன்னை நீயே அறிந்துகொள், அப்படி அறிந்துகொண்டால், அனைத்தும் அறியலாம் என்பதே சித்தர்களின் கோட்பாடு ஆகும். "அகம் (உள்ளம்) வசப்பட்டால் அண்டமே வசப்படும்" என்பதே சித்தர்களின் கருத்தியல் ஆகும். இந்தக் கோட்பாட்டின் படி வாழ்ந்து காட்டியவர்களே சித்தர்கள். […]

விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்த கொள்ள யாரும் முற்படுவதில்லை. ஆனால், தன்னை அறியும் கலையே உலகை அறியும் கலை ஆகும் என்பதை உணர்த்தியவர்களே சித்தர்கள் ஆவர். முதலில் உன்னை நீயே அறிந்துகொள், அப்படி அறிந்துகொண்டால், அனைத்தும் அறியலாம் என்பதே சித்தர்களின் கோட்பாடு ஆகும். "அகம் (உள்ளம்) வசப்பட்டால் அண்டமே வசப்படும்" என்பதே சித்தர்களின் கருத்தியல் ஆகும். இந்தக் கோட்பாட்டின் படி வாழ்ந்து காட்டியவர்களே சித்தர்கள். அதனாலேயே அவர்களுக்கு மனித இயற்கைக்கு அப்பாற்பட்ட எட்டு விதமான சித்துகள் வசப்பட்டன. அவையே:

அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் கூட அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல்
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சித்தர்கள் ஆவர். 'சித்' என்றால் தமிழில் ‘அறிவு’ என்று பொருள். பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள் என்று வழங்கப்பட்டார்கள். உலகத்தவர்க்கு, மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்களே சித்தர்கள் ஆவர். சித்தர்களில் 18 பேர் மிக முக்கியமாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் திருமூலர், இராமதேவர், அகஸ்தியர், கொங்கணர், கமலமுனி, சட்டமுனி, கருவூரார், சுந்தரனார், வான்மீகர், நந்திதேவர், பாம்பாட்டி சித்தர், போகர், மச்சமுனி, பதஞ்சலி, தன்வந்திரி, இடைக்காடர், குதம்பை சித்தர், கோரக்கர் ஆகியோர் ஆவர்.

சித்தர்கள் தாங்கள் பின்பற்றிய கொள்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர். உதாரணமாக:

1. சன்மார்க்கச் சித்தர்கள் - திருமூலர், போகர்.
2. ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
3. காயச் சித்தர்கள் - கோரக்கர், கருவூர்ச் சித்தர், மச்சமுனி, சட்டமுனி, சுந்தரானந்தர், உரோமுனி

உள்ளமும் உடலும் ஒன்றாக சிகிச்சைப் பெற வேண்டும். அதுவே முழுமையான பலன் அளிக்க வல்லது என்பர் சித்தர்கள். அவர்களின் இந்த வைத்திய முறையே பிற்காலத்தில் 'சித்த வைத்தியம்' என்ற பெயரில் அழைக்கப்படலாயிற்று. சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிடப்பட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் அறிவியல் அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்ப, மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளாகச் சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளனர். அவ்வைத்திய முறைகளை, பெரும்பாலும் மனிதர்களின் வசிப்பிடத்தின் அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டே விளக்கியுள்ளனர்.

உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்கும் மரபு கொண்டது சித்தமருத்துவமாகும். மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் நோயாளிகளுக்குத் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகைளயும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும்.

நவீன மருத்துவம் நோயின் வீரியத்தையும் தன்மையையும் குணப்படுத்த மருந்து தருகிறது. அனால், சித்த மருத்துவம் நோயின் காரணிக்கு மருந்து தருவதாகும்.

"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

என்பதே சித்த மருத்துவமாகும்.

நாமும் நவீனத்தின் மோகத்தினால் அரிய பொக்கிஷமாக இருந்த சித்தவைத்திய முறையை மறந்து போனோம். இனியும் அலட்சியம் வேண்டாம். சித்த மருத்துவத்தின் மகத்துவம் அறிந்து வருங்காலத்தில் வாழ்ந்திடுவோம்.

3
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu