மதுராந்தகம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஜோத்பூர் நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் புறப்படாமல் இருப்பதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.