உலக அளவில், அநேகமான வாட்ஸ்அப் பயனர்கள், தங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான தொல்லை அழைப்புகள் வருவதாக புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக பணி செய்த வாட்ஸ் அப் நிறுவனம், தற்போது, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை சைலண்ட் செய்யும் புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதற்காக, வாட்ஸ்அப் செயலியில் ‘சைலன்ஸ் அன்னோன் காலர்ஸ்’ என்ற புதிய அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனரின் காண்டாக்ட் லிஸ்ட் பட்டியலில் இல்லாத தொலைபேசி எண்களில் இருந்து வரும் வாட்ஸ்அப் அழைப்புகள், ரிங்டோன் இல்லாமல் இருக்கும். அதே வேளையில், அழைப்பு வந்ததற்கான நோட்டிபிகேஷன் பயனருக்கு காட்டப்படும். இது தொல்லை அழைப்புகளில் இருந்து விடைபெறும் மிகச் சிறந்த தீர்வாக சொல்லப்பட்டுள்ளது.
பயனர் வசதிகளை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ச்சியாக பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், இந்த சைலண்ட் மோட் அம்சமும் இணைந்துள்ளது. இதற்கு வாட்ஸ்அப் பயனர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைப்பதாக கூறப்படுகிறது.