எஸ்விபி பிரிட்டன் வங்கியில் 2 பில்லியன் யூரோக்கள் முதலீடு - எச்எஸ்பிசி

March 15, 2023

அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் பிரிட்டன் பிரிவை வெறும் 99 ரூபாய்க்கு எச்எஸ்பிசி வங்கி கையகப்படுத்தியது. தற்போது, எஸ்விபி எனப்படும் சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் பிரிவில், கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. மேலும், கூடுதல் நிதியை ரொக்கமாக செலுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம், எஸ்விபி வங்கியின் பிரிட்டன் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான முறையில் வங்கிச் செயல்பாடுகள் […]

அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் பிரிட்டன் பிரிவை வெறும் 99 ரூபாய்க்கு எச்எஸ்பிசி வங்கி கையகப்படுத்தியது. தற்போது, எஸ்விபி எனப்படும் சிலிக்கான் வேலி வங்கியின் பிரிட்டன் பிரிவில், கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. மேலும், கூடுதல் நிதியை ரொக்கமாக செலுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், எஸ்விபி வங்கியின் பிரிட்டன் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கமான முறையில் வங்கிச் செயல்பாடுகள் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வங்கி ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியில், வாடிக்கையாளர்களுக்கு வங்கி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்எஸ்பிசி வங்கியின் பிரிட்டன் பிரிவு தலைமை செயல் அதிகாரி இயன் ஸ்டூவர்ட், தனது லிங்க்ட்இன் பதிவில் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu