சிமி அமைப்பு பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாகவும் இந்த அமைப்பின் மீது 2001 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பிற்கு முதன்முதலில் தடை விதிக்கப்பட்டது. இது பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாலும் தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வந்த ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் இதற்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. பின்னர் 2014ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதும் ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வரும் அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.