சில தினங்களுக்கு முன்னர், வியாழன் கோளை ஆராய்ச்சி செய்வதற்காக ஜூஸ் என்ற விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் செலுத்தியது. தற்போது, இந்த விண்கலம் விண்வெளியிலிருந்து பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம், தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஜூஸ் விண்கலம் வியாழனின் 3 நிலவுகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. அந்த நிலவுகளில் தண்ணீர் உள்ளதா மற்றும் வேறு உயிர்கள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்த விண்கலம் பகிர்ந்துள்ள புகைப்படம், ‘செல்பி’ என்ன சொல்லப்பட்டுள்ளது. பூமி பின்புலத்தில் தெரியும் படி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 14ஆம் தேதி, ஜூஸ் விண்கலம் ஏவப்பட்ட சில மணி நேரங்களில் இது எடுக்கப்பட்டதாக ஐரோப்பிய விண்வெளி மையம் கூறியுள்ளது.