2014-ஆம் ஆண்டில் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது என மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நாடாளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் உள்ள மருத்துவர்களின் தேவையை நிறைவேற்றவும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலே படிப்பதற்கு மோடி அரசு முயற்சி எடுத்து வருகிறது. நாட்டில் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 87 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை அனைத்து பிரிவினரிடையேயும் பாராட்டை பெற்று வருகிறது.
2014-ஆம் ஆண்டில் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதில் கழிவறைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. 2.5 லட்சம் பள்ளிகளில் சுமார் 4.5 லட்சத்திற்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக இடைநிற்றல் விகிதம் 17 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.