ஏர் இந்தியா விமான நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், டாடா குழுமத்திற்கு 267 மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கவுள்ளது. இதன் மூலம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா குழுமத்தில் 25.1% பங்குகளைப் பெறுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துடன் இணைந்த பிறகு, ஒட்டுமொத்தமாக 'ஏர் இந்தியா' என்ற பெயரிலேயே விமான நிறுவனம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்பிற்கு பின்னர், விஸ்தாரா ஏர்லைன்ஸ் அளவைவிட 4 முதல் 5 மடங்கு கூடுதலாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவற்றின் இணைப்பு, இந்திய விமானப் போக்குவரத்து துறையில் மிக முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இரு விமான நிறுவனங்களையும் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.