சிங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல்

August 31, 2023

ங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் அதிபர் போட்டியில் முன்னணியில் உள்ளார். இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தான் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா அறிவித்தார். இந்நிலையில் கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் […]

ங்கப்பூரில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் அதிபர் போட்டியில் முன்னணியில் உள்ளார்.

இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் தான் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா அறிவித்தார். இந்நிலையில் கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தர்மனுடைய முன்னோர்கள் தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவர்கள். தர்மன் சிங்கப்பூரில் 1957-ம் ஆண்டு பிறந்தார். 2001-ம் ஆண்டு அரசியலில் ஈடுபட்ட அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் மக்கள் செயல் கட்சியில் அமைச்சராக பணியாற்றினார். சிங்கப்பூர் எம்.பி.யாக இவர் கடந்த 2001-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை இவர் கல்வி, நிதி அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பணியாற்றினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu